Feb 15, 2012

வாகன ஓட்டி

நமது தெருக்களில் தான் எத்தனை விதமான வண்டி ஓட்டிகள்? அவர்களை வகைப்படுத்தினால்? இது பெரும்பாலும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு என்றாலும் பெருவாகன ஓட்டிகளுக்கும் சிலது பொருந்தும். அவர்களுடைய 'நிக்நேம்' மற்றும் அவர்களை பற்றிய சிறு குறிப்பு:

சொறி முத்து:
இவருக்கு வண்டியில் ஏறி ஓட்ட ஆரம்பித்த உடனே சொரிய ஆரம்பித்துவிடும். அதுவும் முதுகு, கெண்டைகால் என்று அணுக முடியாத இடங்களில்தான்..
என்னதான் சொரிந்து கொண்டே இருந்தாலும் இவருக்கு ஒழுங்கு என்பது மிக முக்கியம். அவிழ்ந்திருக்கும் ஷூ லேசை கட்டுவது, பெல்ட் சரி பண்ணுவது, சரியாக சட்டை இன் செய்யப்பட்டிருக்கிறதா என் சோதனை செய்வது (ஆம் அத்தனையும் வண்டி ஓட்டிக்கொண்டேதான்) என்று தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பார். இதனால் வண்டி சைடு வாங்கும் தான், பின்னால் வருபவர்கள்தான் ஒதுங்கி போக வேண்டும். ஒழுங்கு முக்கியமில்லையா?


மன்மோகன் ஜி:
இவர் அமைதியானவர். பெரும்பாலும் வயதானவர் அல்லது சமீபமாக விழுந்து வாரியவர். பத்து கி.மீ. வேகத்தில்தான் வண்டி ஒரு ஓரமாக ஓடும். இவர் யார் வம்புக்கும் போக மாட்டார், இவர் வம்புக்கும் யாரும் போக வேண்டாம். ஓவர்டேக் பண்ணி பொய் கொள்ளுங்கள்

பிரபுதேவா:
வண்டியோடு சேர்ந்து வளைந்து நெளிந்து தெருவில் நடனமாடியபடியே ஓட்டுபவர். இந்த லேனில் இருந்து அங்கு தவ்வுவது, மறுபடி அங்கிருந்து இங்கு வருவது, 180 டிகிரியில் அப்படியே நகர்வது என்று பலவித சேட்டைகள்.. ஆபத்தானவர். மன்மோகன் ஜிக்கு பாவம் இவரை கண்டாலே பயம்



சங்கீத ஸ்வரங்கள் மம்மூட்டி:
இவருக்கு செல்போனில் வண்டி ஓட்டும்போது பேச மிக பிடிக்கும். எங்கு அழைப்பு தவறி விடுமோ என்று வைப்ரேஷனில் வைத்து, வண்டி ஓட்டிக்கொண்டே அந்த டைட்டான பாக்கெட்டில் இருந்து கஷ்டப்பட்டு எடுத்து பேசிவிடுவார். இவர் இப்போது அதே  டைட்டான பாக்கெட்டில் இருந்து எடுத்து குருஞ்செய்திகளுக்கும் உடனுக்குடன் பதில் அளிக்கிறார். பின்னால் வருபவர்கள் இவரின் காதலை ஒன்றும் தொந்தரவு பண்ண வேண்டாம்


கலா ரஸிகர்:
தெருவை தவிர அத்தனை விஷயங்களிலும் கண் இருக்கும். இவர் கண்ணில் இருந்து ஒரு பேனர், கடை, இயற்கை காட்சி தப்பிவிடாது. தினம் பார்த்தாலும் ஒவ்வொரு முறை ஒவ்வொரு தரிசனம் காணுவார். இவருக்கு பிறரால் தொடர்ந்து தடங்கல்கள் உண்டு. இருந்தாலும் கடைசி நொடியில் ப்ரேக் போடுவது, திடீரென்று சுதாரிப்பது என்று கலைபயணத்தை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறார்


ரவீந்திர ஜடேஜா:
இவர் எப்போது நன்றாக ஒட்டினாரோ, யாருக்கும் தெரியாது. ஒன்றிரண்டு தடவை ஆள் இல்லாத தெருவில் ஓட்டிவிட்டு 'சூப்பரா வண்டி ஓட்டுகிறேன்' என்று இவராக நினைத்துக்கொண்டு மெயின் ரோட்டில் இறங்கிவிடுவார். சேதாரம் உண்டு

சுவாமிஜி:
யாராவது பெண்கள் ரோட்டில் தென்பட்டுவிட்டால் இவருக்கு குஷி ஆகிவிடும். தொடர்ந்து சென்று சைட் அடிப்பது, ஸ்கூட்டி பக்கத்திலயே போய் லவ்வு பண்ணுவது என்று, தெருவில் எவ்வளவு ரணகளமாக இருந்தாலும் இவர் காரியத்தில் கண்ணுங்கருத்துமாயிருப்பார்



விஜயகாந்த்:
செவ்விழிகளுடன், நாக்கை துருத்திக்கொண்டு விடாமல் ஹார்ன் அடிப்பவர். சைக்கிளாக இருந்தாலும் அதில் லாரி ஹார்ன் பொருத்தி இருப்பார். சிக்னலின் சிகப்பில் எல்லாரும் நின்று கொண்டிருந்தாலும் சரி, ட்ராபிக் ஜாமாக இருந்தாலும் சரி.. இவருக்கு அதெல்லாம் தெரியாது. கடுங்கோபத்துடன் ஹார்ன் அடித்து அனைவரையும் வழிவிட சொல்வார். நாட்டை உடனடியாக காப்பாற்ற வேண்டும் அல்லவா? ஆங்


முழுதும் படிக்க..