Jan 19, 2014

வெங்கட் பிரபு

சென்னை 28 பார்த்து விட்டு ஆகா, தமிழுக்கு ஒரு அசல் கேளிக்கைகாரர் கிடைத்துவிட்டார் என்று மகிழ்ந்திருந்தேன். முக்கிய காரணம் படத்தில் இருந்த Innocence, craft மற்றும் இயல்பான நகைச்சுவை.

பாட்டி போட்டோ ஒடஞ்சிருச்சி, சில்ர இல்ல, ஜெய் எதிரி அணியை தோற்கடிக்க முனைப்பாக ஐடியா கொடுக்கும்போது அதை கவனிக்காமல் சுற்றி காமெடி செய்துகொண்டிருக்கும் நண்பர்கள்,
அவுட் ஆகிவிட்டு பேட் கொடுக்காமல் அழிச்சாட்டியம், பெட் மேட்ச், Rivalry, அட்டகாசமான முடிவு என்று படத்தை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். It is indeed a cult movie. அடுத்து வந்த சரோஜாவும் நகைச்சுவையில் குறை வைக்கவில்லை. அதில் fighting மற்றும் chasing சீன்கள் மட்டும் மொக்கை. சொல்லப்போனால் அவைதான் வெங்கட் பிரபு படங்களின் பெரும் குறைபாடுகள்.

ஆனால் அதற்கு பிறகு வந்த அவர் படங்கள் எதிலுமே ஒட்டமுடியவில்லை. அதற்கு முக்கிய காரணம், அவர் இயல்பில் இருந்து விலகிவிட்டார். திரைக்கதையும் அத்தனை கட்டுக்கோப்பாக இல்லை (நான் கதையை எதிர்பார்க்கவில்லை). எப்போதும் குடித்துக்கொண்டு கிளப்புகளில் ஆடுவது என்பது அனைவருக்கு வாய்க்காது. அவர் படங்களின் பலமான Innocent comedy-ஐ குறைத்துவிட்டு, குறைபாடான fighting, chasing சீன்களை அதிகப்படுத்த ஆரம்பித்து விட்டார்.

பிரியாணி, கோவா படங்களில் கூட ஆங்காங்கே பளிச்சிடும் அந்த இயல்பான நகைச்சுவையை (தூக்கில் தொங்குவதற்கு முன் 'நான் இன்னும் கன்னி கூட கழியலை', Gay ஜோடி எமோஷனலாக பேசிக்கொண்டிருக்கும் போது 'தண்ணி வரலீங்க') பெரும்பாலும் தேடவேண்டி இருக்கிறது. 'நான் புக்கெல்லாம் படிக்கறது இல்லை' என்று சொல்லும் வெங்கட், புதிய விஷயங்களை வேறு எந்த வழியாக பிடித்தாலும் பரவாயில்லை. ஆனால் பழையபடி அவர் ஃபார்முக்கு வர பெரும்பாலான இளைஞர்களின் இயல்பை ஒட்டி எடுப்பதன் மூலமும், புதிய களங்களை, நல்ல திரைக்கதையை அமைப்பதன் மூலமுமாகவே முடியும்.

- A Venkat Prabhu Fan

19/365


1 comment:

தமிழ் பையன் said...

சரியான கருத்து. எல்லாம் வியாபாரம் (பணம்) செய்யும் வேலை.