Jan 10, 2017

படித்த புத்தகங்கள் - 2016

புத்தகங்கள்
Serious Men - Manu Joseph
Freedom At Midnight Paperback by Dominique Lapierre, Larry Collins
காடு - ஜெயமோகன்
Things a little bird told me - Biz Stone
கருத்த லெப்பை - கீரனூர் ஜாகிர்ராஜா
Second Foundation - Isaac Asimov
ஜீரோ டிகிரி - சாரு நிவேதிதா
பிறகு (பூமணியின் ஐந்து நாவல்கள்)
The story of Philosophy - Will Durant
Ancillary Justice - Ann Leckie
வாடிவாசல் - சி.சு.செல்லப்பா
தீண்டாத வசந்தம் - ஜி.கல்யாண ராவ்


படிக்கும் புத்தகங்களைப் பற்றி இரு வரிகளாவது எழுத வேண்டும் என்பது எனது உறுதிமொழி, சென்ற வருடம் அதை கடைப்பிடிக்க இயலவில்லை. கீழே சில புத்தகங்களுக்கு மட்டும் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்திருக்கிறேன். ஒன்றுமே குறிப்பிடாமல் காலத்தை ஓட்டுவதற்கு இந்த அவசர கோலத்தையாவது பதிவு செய்ய முடிவெடுத்துவிட்டேன். சில புத்தகங்கள் விடுபட்டுள்ளன, நினைவில் வந்ததும் சேர்ப்பேன்.

***

Freedom at midnight - Dominique Lapierre, Larry Collins

காந்தி-நேரு-மவுண்ட்பேட்டன் ஆகியோரையும் தேசத்தின் முக்கிய நாட்களையும் முழுமையாக புரிந்துகொள்ள படிக்கவேண்டிய புத்தகம். சும்மா அடித்துவிடாமல் வரும் ஒவ்வொரு வரிக்கும் ஆதாரம் வைத்திருக்கிறார்கள். வரலாற்றை 'சுவாரசியமாக' , மிக சுவாரசியமாக சொல்லும் புத்தகங்களுக்கு இது ஒரு முன்னோடி.. பிரிவினை எனும் மிகப்பெரிய வலியைக் கடப்பது அத்தனை எளிதல்ல. அதிலும் இதில் வரும் பல காட்சிகள் தூக்கத்தை கெடுப்பவை.

ஒரு காட்சி: படுகொலைகளையும் படு கொடுமைகளையும் அனுபவித்து, எஞ்சியவர்கள் மனித மந்தைகளாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கும் இங்கிருந்து அங்கும் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஒரு இடத்தில் இந்துக்கள் கூட்டமும் முஸ்லிம் கூட்டமும் சந்திக்க வேண்டிய அபாயம். என்ன நடக்குமோ எனும் பதைப்பு. அவ்வளவு பேரும் மாபெரும் அழிவுகளையும் வெறுப்பையும் சுமந்து கொண்டிருப்பவர்கள். அவர்கள் எதிரெதிரே, அதுவும் கூட்டமாக சந்தித்தால்?

நடந்தது வேறு. பெரும் சப்தத்துடன் எதிர் எதிரே வந்த அந்த மாபெரும் ஜன ஆறுகள் கடக்கையில் ஒரு சிறு சத்தம் கூட எழுப்பாமல், திரும்பாமல் கொள்ளாமல் ஒருவரை ஒருவர் கடந்து செல்கிறார்கள்!

இப்படி ஏராளமான சம்பவங்கள், தகவல்கள். புத்தகத்தில் எரிச்சல் படுத்தும் ஒரே விஷயம் எத்தனை முயன்றும் அப்பட்டமாக வெளிப்படும் வெள்ளைத்தோல் தூய்மைவாதம். இது பெரும்பாலும் ஆங்கிலேய அதிகாரிகளின் குறிப்புகளைக்கொண்டு எழுதியதால் கூட இருக்கலாம். பிரிவினையில் ஆங்கிலேயர்களின் தவறுகள் பல, ஆனால் தங்கள் தவறேதும் அதில் இல்லை என்று முடிந்தவரை நியாயப்படுத்துகிறார்கள்.


காடு - ஜெயமோகன் 

நாவலைப்பற்றி ஏராளமாக எழுதப்பட்டுவிட்டதால் எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திய ஒரு இழையை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன் - சடுதியில் முடிந்துவிடும் வாழ்க்கை, அதன் நிலையாமை, உண்மையில் இந்த அம்சத்தை இப்பொதெல்லாம் நான் காணும், படிக்கும் அத்தனை விஷயங்களிலும் பாம்புத்தொடுகை போல் உடனே பிடித்துவிடுகிறேன் அல்லது அதை மட்டும் அதீதமாக கவனிக்கிறேன். 

 'அவ்வளவேதானா இளமை?' என்பது போல் அவ்வளவேதானா வாழ்க்கை என்று ஒவ்வொரு தினமும் தவிப்படைகிறேன். அப்படி கேட்டுக்கொள்ளாதவர்கள் யார் என கதையில் வருகிறது. இருந்தாலும் முப்பது வயதில் எனக்கு இருக்கும் இந்த தவிப்பு கொஞ்சம் அதிகமாகவே தோன்றுகிறது. கண்ணெதிரே ஒரு தலைமுறை வயதாகி விட்டதையும், இதோ இப்போதுதான் பார்த்து ரசித்த கலைஞர்கள் எல்லாம் பழைய ஆட்களாக ஆகிப்போனதையும் அதிர்ந்தபடியே தான் நோக்குகிறேன்.

இந்த பதட்டத்தை காலங்களை முன்பின்னே கடக்கும் கதையின் அமைப்பு அதிகரிக்கவே செய்கிறது. ஏதோ கனவில் மட்டும் பார்த்துக்கொண்டவர்கள் நேரில் சந்திப்பதைப்போல் இருந்தது கடையில் உட்கார்ந்திருக்கும் குரிசு, குலசேகரத்தில் போத்தி, மலைமேல் அய்யர் போன்ற கிரியின் சந்திப்புகள்.

கிரி, லௌகீக வாழ்க்கையில் தோல்வி அடைவது எதனால் என்ற கேள்வி சில நாட்கள் கழித்து அலைக்கழித்தது. 'உன் அகங்காரம் தான் காரணம்' என அய்யர் சொன்னாலும் அது மட்டுமேவா? அவன் சங்கப்பாடல்களில் லயிக்கும் அளவிற்கு நுண்ணறிவு கொண்டவன். ஆனால் கனவுகளில் வாழ்பவன். அதீதங்களை தேடுபவன். பகலில் அடிக்கடி போய் படுத்து தூங்கிவிடுகிறான், இரவில் விழித்திருக்கிறான். அவனது அப்பா தோல்வி அடைந்து யதார்த்தத்தை புரிந்துகொள்ளாதவர் என்பது இங்கு முக்கியம்.. நடைமுறை வாழ்வில் தோல்வி அடைந்தவர்களின் பிள்ளைகள் அது மறுபடி நடக்கக்கூடாது என்பதில் பெரும் பதட்டம் கொண்டவர்கள், ஆனால் அந்த பதட்டம் கிரிக்கு வரவில்லை - அவனது மகனுக்கு வாய்த்தது.

ஆனால்.. அப்படிப்பார்த்தால் எதிர்வீட்டு தமிழ் வாத்தியார் - கம்ப இராமாயண பித்தர். அவர் குடும்பத்துக்கு அனைத்தையும் சரியாக செய்தவர்தான்.. இருந்தும் கடைசியில் அவர் சந்திப்பது வெறுப்பை மட்டுமே. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?

காமத்தை  முழுமையாக புரிந்து வெல்ல முடியுமா?  வெல்லத்தான் வேண்டுமா? குறிஞ்சிப்பூவை பார்ப்பது போல் புறவயமாக காமத்தை செயல்படுத்திப் பார்த்ததுமே ஏன் அவ்வளவு ஏமாற்றம்? மனத்தில் எத்தனை நாட்கள் நிகழ்த்திப் பார்த்தாலும் அலுப்பதில்லையே? காடு என்பது காமமா, இளமையா?

இது ஒரு புறம். மலையன் புரத்தை வெட்டிக்கொண்டு போகப்போகும் சாலை.. பாடம் பண்ணபட்ட கீரக்காதன்....என பதைக்க வைக்கும் காட்டழிவு காட்சிகள்.. . குறிஞ்சியில் உட்காரும் வண்டை பார்த்து 'இனி எத்தனை தலைமுறை கழித்து வண்டு இனத்திற்கு இந்த தொடுகை வாய்க்குமோ?' என பரிதாபப்படும் கிரி, மனிதனைப்பார்த்து பரிதாபப்படும் இயற்கை...

காமத்தின் அம்சங்களே இதில் எழுத்து வடிவமாக; நீலி-கிரி சந்திப்பு முதலிலேயே நிகழ்ந்து, எடுத்த எடுப்பிலேயே தழுவி எல்லாம் முடிந்திருந்தால் ஏமாற்றமே மிகுந்திருக்கும். எவ்வளவு ஏக்கத்தை கடந்து எத்தனை பக்கங்கள் தாண்டி எல்லாம் நடக்காமல் நடந்து முடிகிறது? அதுவே அந்த நினைவை துடிப்படங்காமல் இருக்க வைக்கிறது.

மேலே உள்ள பத்திகளே காடு போல் கெச்சலாக இருப்பதும் காரணமாகத்தான் போலும். நாவலில் வரும் காட்டின் மனிதர்கள், மிருகங்கள், பருவங்கள், சம்பவங்கள், ஊர், அன்றாடம் என்று அனைத்தும் ஏற்படுத்திய தாக்கத்தை வார்த்தையில் முறையாக வெளிப்படுத்தினாலே அதன் அணுக்கம் போய் விடும். அப்படியே உணர்வாகவே இருந்துவிட்டு போகட்டும்.


Things a little bird told me - Biz Stone
ட்விட்டர் உருவாக்கக்குழுவில் இருந்த Biz-ன் சுயசரிதை மாதிரி இந்த புத்தகம். கிட்டத்தட்ட சுயமுன்னேற்ற புத்தகம். ஆகவே அதில் இருந்தததை சுருக்கி சுயமுன்னேற்ற பாணியிலேயே கீழே.

Biz success mantra:

  • Visualize where u want to be continuously,
  • Create opportunities,
  • Ask questions, a lot. creativity is infinite. Its free.
  • Talk with key stakeholders. Discuss a lot with talented people.
  • Emotional attachment with what you do - would then love your job no matter what.
  • Failure is part of life - deal with it honestly
  • Find bright spot in the environment of negativity. Find things that work and build on it
  • Rules help, but dont have to always stick to it - as long as we are sure whats good and bad
  • Never give into irrational fear - seek knowledge no matter what
  • Show empathy, be kind
  • Altruism compounds - start early within your means.  it helps ourself! E.g. Jobless can go volunteer which can benefit them in myriad ways
  • Money is not all. but having money definitely frees you up

Other interesting things like Twitter's challenges (whale showing up frequently), it's growth, use by powerful people, protests etc., find place in the book. There is also an interesting aspect about Biz Stone, who is not a developer and whose role was always hazy in the company.
There are sermons too towards the end about how capitalism should be people centric while money is made (simultaneously explaining about leadership changes in the company and firing of the founder himself by the company board etc.,).

But isn't 'capitalism' and 'people-centric' oxymoron? It is always about making infinite profits no matter what.


கருத்த லெப்பை - ஜாகிர் ராஜா
முஸ்லிம்களின் அபிரிமித, நிறுவனப்படுத்தப்பட்ட மதப் படிப்பு ஏன் என்பதைத் தாண்டி அதன் மூலம் என்ன நடக்கிறது என்று யோசித்தால், அதிகாரம் ஒரு இடத்தில் குவிகிறது. அதிகாரக்குவியல் என்றுமே பிரச்சினைதான் என்பதை பெரும்பாலும் அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். யார் அந்த அதிகாரத்தை கையில் வைத்திருப்பது, அப்படி வருபவர்கள் எப்போதுமே யோக்கியவான்களா, யோக்கியர்களையும் அதிகாரம் எப்படி மாற்றுகிறது போன்ற பிரச்சினைகள்.

நினைப்பதை செய்து கொள்ள முடியாத கையாலாகாத்தனம் தான் இக்குறுநாவலின் மையம் என்று பார்க்கிறேன். அது நியாயமான ரொம்பச்சிறிய விஷயமாக இருந்தாலும் சரி. ஏன் நரகல் போன்ற சூழலில் புகுந்த வீட்டில் இருக்கும் அக்கா ருக்கையாவை கருத்த லெப்பையால் திரும்ப தன் வீட்டுக்கு அழைத்து வர இயலவில்லை? இத்தனைக்கும் மனம் பிறழ்ந்த மாப்பிள்ளையின் கேடுகெட்ட அண்ணன் ஈசாக் கூட்டிக்கொண்டு போகும்போது கூட? அவர்கள் வீட்டு நாய் செய்ய முடிவதைக்கூட அவனால் செய்ய முடிவதில்லை.

ஆனால் ஒன்று. கையாலாகாத்தனங்களில் வகைகள் உண்டு. கருத்த லெப்பையிடம் இருப்பதை இந்த வார்த்தையால் குறிப்பது கூட தவறாக இருக்கலாம். ஒடுக்கப்படுபவர்களிடம் அது கையறு நிலையாக உருமாற்றம் பெறுகிறது. அவனால் என்னதான் செய்ய முடியும்?



Second Foundation - Isaac Asimov (story brief in tamil)
பல்லாயிரம் வருடங்களாக கேலக்ஸி அரசுகள் மாறி மாறி ஆட்சி செய்கிறது. சுபிட்சமான உலகமது..அதாவது, பல உலகங்கள் சேர்ந்த ஒரு பேரரசு. ஆனால் அதன் அழிவை உணர்ந்த விஞ்ஞானி ஹரி செல்டன் உருவாக்கும் அறிவியலாளர்கள் நிறைந்த கட்டமைப்பின் பெயர் Foundation (ஆம், ஹரிதான். ஆனால் இந்தியனா என்று கேட்கக்கூடாது. மனிதகுலம் பூமியில் தோன்றியது என்பதே மறக்கப்பட்டு விட்ட ஓர் யுகம் அது) . மனிதவியலை ஆராய்ந்து அதன் போக்கை கணிக்கிறார் ஹரி. அதன்படி அப்போதிருக்கும் பேரரசு அழிந்து வேறு ஒரு அழிவு அரசு தோன்றும், முப்பதாயிரம் ஆண்டுகள் சண்டையிலும் நாசத்திலும் கேலக்சி மூழ்கும் என்பதை கண்டுகொள்கிறார். அவ்வளவு நாட்கள் இழுக்காமல் குறுகிய காலத்தில் (ஆயிரம் ஆண்டுகளில்!) நாகரிகத்தை மறுபடி தோற்றுவிக்கும் அமைப்புதான் Foundation. சரி, அதையே யாராவது அழித்துவிட்டால்? அதற்காக கேலக்சியின் நேர் எதிர் முனையில் ரகசியமான மற்றொரு Back up Foundation ஒன்றையும் அமைக்கிறார். அது எத்தனை ரகசியம் என்றால், அது வெறும் கற்பனை புரளிதான் என்று அனைவரும் மறந்துவிட்ட அளவுக்கு ரகசியம்.

ஆனால் அவர் கணிக்காதபடி Mule என்றழைக்கப்படும் Mutant (மனிதனின் பரிணாம வாரிசு) பேரரசு + Foundation ஆகியவற்றை சேர்த்து அழித்துவிட்டு அடுத்த கூட்டமைப்பை  உருவாக்குகிறார். எப்படி அவரால் முடிகிறது? ம்யூலை வாலி என்று சுருக்கமாக சொல்லலாம். பிரபஞ்சத்தின் அத்தனை பேரின் உணர்ச்சிகளை அறியவும், மாற்றவும் அவரால் முடிகிறது, கிட்டத்தட்ட கடவுள்! ஆனால் அதுவே நிரந்தர தனிமை எனும் சாபமாகி விடுகிறது. அத்தாம் பெரிய கோட்டையில் தனித்து கிடக்கிறார் அரசர். பேச்சுத்துணைக்கு ஒரு காவலாளி கூட இல்லை (அது தான் தேவையே இல்லையே? எங்கு எந்த எதிரி இருந்தாலும் உடனே அவரின் சிந்தனையை மாற்றி விட வேண்டியது). எனிவே, அவரின் பிரபஞ்சத்தையே ஆளும் கனவின் குறுக்கில் நிற்பது ஒன்றுதான் - ரகசியமான அந்த இரண்டாம் அடித்தளம். கற்பனை என்று புறந்தள்ளினாலும் ஒருவேளை உண்மையாக அது இருந்தால்?

அதை தேடிப்போகும் ராணுவத்தின் தளபதி ஹான் பரிட்சர். கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே அவருடன் இன்னும் மனமாற்றமாகாமல் ம்யூல் விட்டு வைத்திருக்கும் பில் சான்னிசை சேர்த்து அனுப்புகிறார். கண்டுபிடித்தார்களா? இவர்கள் தேடியவர்கள் உண்மையில் இருந்தார்களா, ம்யூல் போன்ற வசியக்காரரை வென்றார்களா?

மதம், அரசியல் கொள்கை என்று எதுவுமே அளவு மிஞ்சிய அதிகாரம் கையில் சேர்ந்ததும் மாறிவிடுமா? அப்படி ஒரு அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் இரண்டாம் அடித்தளத்தை முழுதாக நம்பி விட்டு வைக்க முடியுமா? இரண்டாம் பாதியில் கதை அப்படியே மாறுகிறது, இங்கும் இரண்டாம் அடித்தளத்தை தேடுகிறார்கள். ஆனால் தேடுவது செல்டன் திட்டத்தின் முதல் கண்ணான முதல் அடித்தளத்தை சேர்ந்தவர்கள்.
ஆர்காடி டேரல், சூட்டிகையான சிறு பெண், பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆகப்போகிறவர். அவள் அப்பா டாக்டர் டேரல் - ரகசிய நண்பர் Pelleas Anthor ஆகியோர் அடங்கிய ஐந்து சூழ்ச்சியாளர்கள் எதைப்பற்றி ஆராய்கிறார்கள்? இரண்டாம் அடித்தளத்தை ஏன் சந்தேகத்துடன் அணுகுகிறார்கள், ஆராய்கிறார்கள்? ஒரு புள்ளிக்குப் பின் ம்யூலும் இரண்டாம் அடித்தளக்காரர்களும் ஒன்றுதானா?

அதை எப்படி தடுப்பது? டாக்டர் டேரல் அவர்களின் குழு அந்த சதியில் ஈடுபடுகிறது. இவர்கள் தேடும் விடை காலகன் கிரகத்தில் இப்போது யாரும் நுழையாமல் கிடக்கும் ம்யூலின் மாளிகையில் கிடைக்கக்கூடும். அதற்காக தங்கள் ஆள் 'ஹோமிர் மண்'னை அனுப்புகிறார்கள். அவருடன் யாருக்கும் தெரியாமல் சேர்ந்துகொள்ளும்  சுட்டிப்பெண் அர்காடியா. போன இடத்தில் உலகை வெல்லும் கனவுடன் இருக்கும் ராஜாஹ் ஸ்டேட்டின். அவர் படையெடுக்க விருக்கிறார். அவரின் ஆசை நாயகி காலியா. அங்கு எதிர்பாரா விதமாக இரண்டாம் அடித்தளம் எங்கிருக்கிறது என தெரிந்து கொள்ளும் அர்காடியா. ஆனால் அவளும் மண்ணும் தன் வெற்றிக்குமுக்கியம் என புரிந்துகொள்ளும் ராஜாஹ், சிறுமியை நாயகியாக்கிக்கொள்ள விழைகிறார். தப்பி ஓடும் சிறுமிக்கு உதவுகிறது  ஒரு 'ஊர்க்கார' குடும்பம் (ஒரு காலத்தில் கேலக்ஸியையே ஆண்ட ட்ராண்டர் கிரகம் இப்போது விவசாயம் செய்துவருகிறது. அதைச் சேர்ந்தவர்கள்) . ஆர்காடியும் தனது சொந்த ஊருக்கு போகாமல் அவர்களுடன் ட்ராண்டருக்கு போகிறார். அதற்கு முக்கிய காரணம் இரண்டாம் அடித்தளம் எங்குள்ளது என்பதை அவள் அறிந்துகொண்டதே.

இறுதியில் இந்த முதல் அடித்தளக்குழு அவர்களை கண்டுபிடிக்கிறதா, அப்படி ஒன்று இருப்பது உண்மைதானா  என்பதற்கு விடை அளித்து கதை முடிகிறது.

கதை கேலக்ஸி அளவில் நடந்தாலும், உண்மையில் முழுக்க முழுக்க மூளை விளையாட்டாக இருப்பது அதன் சிறப்பம்சம்.. அடுத்தவர் உணர்வுகளை கிரகித்து மாற்றக்கூடிய வல்லமை படைத்தவர்கள் விளையாடுவது. நமது சிந்தனை உண்மையில் நம்முடையதுதானா, அல்லது நடப்பட்டதா? (இன்செப்ஷன் மாதிரி). இதைச்சுற்றி அடுத்தடுத்து வரும் திருப்பங்கள், துரோகங்கள், வெற்றிகள் என சுவாரசியமான கான்செப்ட்.

வேறு சில சுவாரசியங்களும் உண்டு. டச் ஸ்க்ரீன் போன்று தொட்டு (zoom கூட செய்யலாம்) அப்போதே எழுதியிருக்கிறார் அசிமோவ். இதில் வந்த இன்னொன்றும் வெகு சுவாரசியம். கிட்டத்தட்ட மதத்தை போல் நடத்தப்படும் 'அடித்தளம்' அமைப்புக்கு பைபிள் போன்ற வழிகாட்டு நூல் உண்டு. அது அவ்வப்போது கூட்டு தணிக்கை (peer review மாதிரி) செய்யப்பட்டு மாற்றங்களை இணைத்து சீராக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்! இப்போதிருக்கும் எந்த மதத்திலும் புனிதவாதிகளின் பிடியே அதிகம். ஆனால் மேற்சொன்ன முறையில் ஒரு மதநூல் இருக்குமானால் அது நூற்றாண்டுகள் கடந்து வலுவுடன் நிற்கக்கூடும்.

பிறகு / தீண்டாத வசந்தம் 
இரண்டு நாவல்களையும் அடுத்தடுத்து படித்தது ஒரு முக்கியமான அனுபவம். எங்கெங்கோ இருக்கும் சேரிகளில் இருக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சூழல்களும் பிரச்சினைகளும் எப்படி ஒன்று போல் உள்ளன என்பது பெரிய ஆச்சரியம். சேரிகளையும் சூழல்களையும் அங்கே வாழும் ஒருவராக உணர வைத்தன இரண்டு புத்தகங்களும்.
சாதிகளைப் பற்றி வரும் வருடம் மேலும் நிறைய படிக்கவேண்டும்.

பிறகு கதைச் சுருக்கம்:
கதைக்களம் கோவில்பட்டியை சுற்றியுள்ள எதோ ஊரில் ஐம்பதுகளின் அருகில் நடக்கிறது. மனலூத்தின் சக்கிளிபுரம். மேலத்தெரு நாயக்கர்கள் ஆகியோரின் கதை. ஊருக்கு வந்தேறியாக, அல்லது வந்து ஏறுங்கள் என மணலூத்துக்காரர்கள் கூட்டிக்கொண்டு வரும் அழகிரி மையப்பாத்திரம். வந்து சக்கிளிபுரத்தில் குடும்பத்துடன் குடியேறுகிறார். மனைவி காளி சீக்காளி, சீக்கிரத்தில் மரணமடைகிறார். மகள் முத்துமாரிக்காக மற்றொரு பெண்ணை மாட்டுத்தாவணியில் இருந்து கூட்டிவருகிறார். ஆவடை.

ஊரின் பெரும்புள்ளிகள் வில்லிச்சேரியார், கோவால் நாயக்கர், சக்கிலியர்களின் ஒரே தோழர் வாழ்ந்து கெட்ட கந்தையா. நடுக்கடை செட்டியார், பின் அவரது இட்லி வியாபாரத்துக்கு போட்டிக்கு வரப்போகும் காப்பி கடைக்காரர். ஊர்ப்பெரிசுகளில் குணத்தில் சிறுபயல் அப்பையா - வட்டி விட்டு ஊரில் பாதியை வளைத்து விடுகிறார். 'பெரிய வீட்டுக்கார'ரே அவரிடம் தப்ப முடியாமல் கூட்டு சேர்ந்து கொண்டு பதவிகளை பிடித்துக்கொண்டு, பொதுப்பணத்தை ஊழல் செய்துகொண்டு... ஒன்று சேர ஒன்று தானாக பின்தொடர்கிறது.

நாவல் கோபல்ல கிராமத்தை நினைவூட்டியது. அதே கிராமத்தை சேரியில் இருந்து பார்ப்பதைப்போல் இருந்தது. தோராயமாக நாற்பது ஆண்டுகள் நிகழ்வுகளை கிட்டத்தட்ட அந்த வேப்ப மரத்தை போல் நின்று பார்க்கிறோம். அழகிரி ஊருக்கு வந்ததில் இருந்து கடைசி வரை உட்கார்ந்து செருப்பு/பொருட்கள் தைக்க நிழல் தந்துதவும் அதே வேப்ப மரம்.