Mar 30, 2010

பணம் அய்யா பணம்

பேப்பர் படித்துக்கொண்டிருந்தேன். எவ்வளவு பிரச்சினைகள்? ஏன்? எதற்காக? யோசித்தால்.. வெவ்வேறு காரணிகள். ஆனால், கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், அனைத்துக்கும் பணமே மூலம் என்பது உரைக்கிறது! சில பிரச்சினைகளையும் அதன் வேரையும் (ரூட் காஸ்) பார்த்தாலே இப்படித்தான் தெரிகிறது.


பொதுப்படையாக பார்ப்போம்,
ஏன் அரசியலில் இப்படி அதிகாரத்திற்கு போட்டி? இறுதியில் வரும் பணத்திற்காகவும், ஏற்கனவே சம்பாதித்த பணத்தை காப்பதற்காகவும் தானே?

'சக்தி' வாய்ந்த சாமியார்கள் எப்படி உருவாகிறார்கள். எப்படி/ஏன் அந்த சக்தி தக்க வைக்கப்படுகிறது (சிலர் திருட்டு பேர்வழிகள் என்று நிரூபமான பிறகும்)?
பெரும்பாலான கொலைகள் எதற்கு நடக்கின்றன?

கொஞ்சம் சப்பையாக பார்க்க வேண்டுமென்றால், சில அலுவகங்களில், எவ்வளவு அலைந்தாலும் ஞயாயமாக நமக்கு கிடைக்க வேண்டியதும் (வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்றவை) கிடைக்க மாட்டேங்கிறதே.?

Specific ஆக பார்த்தாலும் சரி.
அணு ஒப்பந்தம்? அக்கறையிலா செய்யப்படுகிறது? பின்னனியில் பணம் தான்..
இடைத்தேர்தல்? ஹீ ஹீ
மத வெறி.. ஏன் உருவாகிறது? மூலைச் சலவையினால்.. ஏன் மூலைச் சலவை? கட்சி வளர்க்க.. எதற்கு? அதிகாரம் வேண்டி.. அதிகாரம் ஏன்? மறுபடி பணம்.


இப்படி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணமே 98% செய்திகள்/பிரச்சினைகளுக்கு காரணம் என்று எண்ண வைக்கிறது. சரி, அதற்கு என்ன இப்போ என்று கேட்கிறீர்களா? ஒன்றும் இல்லை.. இது சரி, தவறு என்று எல்லாம் சொல்லவில்லை.. சும்மா பேப்பர் படிக்கும் போது தோன்றிய இந்த பணத் 'தியரியை' எழுதி உங்கள் கருத்துக்களையும் தெரிந்து கொள்ளலாம் என்று தான்..
முழுதும் படிக்க..

Mar 26, 2010

ஒரு புதுப்பதிவனின் மனக்குமுறல்கள்

அவன் எழுத ஆரம்பித்து ஒன்றரை மாதம் ஆகிறது. இது வரை இலக்கியங்கள் எதையும் படைத்து விடவில்லை. பேமஸ் பதிவர்களின் பதிவுகளை உடனுக்குடன் படிப்பான். பின்னூட்டம் ரொம்ப போட மாட்டான். பெரிய பெரிய ஆளுங்க வர்ற இடம், சின்ன பிள்ளத்தனமா ஏதாச்சும் போட்டு, பேர (!) கெடுத்துக்க வேணாமே அப்படின்னு ஒரு நெனப்பு. அவங்க எல்லாரும் நல்ல விதமாத்தான் பதில் போடுவாங்க. இருந்தாலும்..


நல்லா யோசிச்சி வச்சி ஒரு கான்செப்ட எழுதலாம்னு பாத்தா, அதே விஷயத்த ஏற்கனவே எழுதி இருப்பாங்க. வேற ஏதோ ஒன்ன அடிச்சி புடிச்சி போட்டா, views ஓரளவுக்கு இருக்கும், அப்பப்ப நல்ல Comments வரும். தமிழிஷ்ல பிரபலமாயிடும். ஆனா கமென்ட், பாலோவர்ஸ் கொஞ்சம் தான் என்பதில் வருத்தமே. இதனால் ஓட்டு, கமென்ட், பாலோவேர்ஸ் ஆள் சேர்ப்பது போன்ற விஷயங்களில் இவன் கவனம் திசை திரும்ப ஆரம்பித்தது. எதற்க்காக எழுத வந்தோம் என்பதற்கு கொஞ்சம் விடையும் கிடைத்தது..

பெரிய பதிவர்களுக்கு 'மீ த ஃபர்ஷ்டுனு' போட்றதுக்கு பெரிய அடி தடியே நடக்கும் (மீ செகண்ட், தர்ட்க்கு கூட). இப்படி நாமும் ஒரு நாள் வருவோம்னு ( மீ த ஃபர்ஷ்டு போட இல்ல, வாங்க..) பயலுக்கு நப்பாசை. நெலமை இப்படி  இருக்க,

கட் பண்ணா - ஒரு வருடம் கழித்து..

'ஏன் பின்னூட்டத்துக்கு எல்லாம் பதிலே போட மாட்டேங்கரீங்க?'
'ஏன் மீள் பதிவு போட்டு கொல்றீங்க?' 
'நேரமின்மைதான் ஒரே காரணம், உங்க விமர்சனங்களை நோட் பண்ணாம இல்ல'
'தொடர் பதிவுக்கு கூப்ட்டா எழுத முடியாதோ'?
'இலக்கிய பணிக்கு இடையூறாக இருப்பதால்.. சாரி..'
'500௦ பாலோவர்ஸ், வாழ்த்துக்கள்'
'ம்ம்.. நன்றி..'
'சர்வேசன் 2010 கதை போட்டில உங்களுக்குத்தான் முதல் பரிசு..வாழ்த்துக்கள்'
'மகிழ்ந்தேன்.. பணத்துக்காக எழுதவில்லை. பரிசுத்தொகையையும் உதவும் கரங்களுக்கு அளித்து விடுங்கள்'
'ஆஹா என்னே இவர் பரந்த மனப்பான்மை.. ஆஹா ஆஹா'





சட், தூங்குனதுல நேரம் போனதே தெரியல (இனி கனவுன்னு ட்விஸ்ட் கொடுக்கறவங்கள தூக்குல போட்டுடலாம்.. நானே இதுல கடைசியா இருந்துக்கறேனே?). ப்ளாக்கர் ஓபன் பண்ணி பார்த்தா ஒரு புது கமென்ட். பெரிய பதிவர் ஒருத்தர் 'பிடிச்சிருக்கு, ரசித்தேன்'னு போட்டுருக்கார். தலை கால் புரியல (அடுத்தத இன்னும் நல்லா கொடுக்கணும்.. ம் ம்..)

எது எப்படியோ, எழுத ஆரம்பித்ததில் இருந்து, கவனிக்கத்தக்க மாறுதல்கள் அவனிடம். மூளை முன்னிலும் அதிகமாக வேலை செய்தது. அவனை சுற்றி நடக்கும் விஷயங்களை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான் (இத எழுதலாமா? வேணாம்.. அது? ம்ம் மைண்ட்ல வச்சி அப்பறம் யூஸ் பண்ணலாம்.. ). ஒவ்வொரு பாராட்டுக்கும் அளவில்லா மகிழ்ச்சி. அதிக உற்சாகத்துடன் வளைய வந்தான். எழுதணும், எதாச்சும்  எழுதணும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது.

என்ன ஒரே பிரச்சினை.. எழுத படிக்க என்று, பதிவுலகம் நேரத்தை பயங்கரமாக சாப்பிட ஆரம்பித்து விட்டது. வேலையையும் கெடுக்கிறது. நேரத்தை சரியாக மானேஜ் பண்ண வேண்டும். அச்சச்சோ விடிஞ்சு போச்சா? என் டீம் லீட் வர்றார்.. ஓகே, நைட் ஷிப்ட முடிஞ்சு போச்சு. கெளம்பறேன்.

லாகிங் ஆப்..
முழுதும் படிக்க..

Mar 25, 2010

முதல் வேலை

இந்த பதிவை யூத்ஃபுல் விகடனில் காண..




முதன் முதலில் வேலை கிடைத்த வேளையும், அந்த சூழலும் உங்களுக்கு ஞாபகம் உள்ளதா.? வேலை கிடைத்த செய்தியை சொன்னது யார்? ஆணா? பெண்ணா? கம்பெனி காரரா.? இல்லை உறவினரா? எப்படி இருந்தாலும் அந்த சம்பவம் அத்தனை சீக்கிரம் மறக்க கூடியது இல்லை. எனக்கு வேலை கிடைத்த அனுபவத்தை கொஞ்சம் கொஞ்சம் சொல்கிறேன். 2 நாட்களாக நடந்த அந்த காம்பஸ் இன்டர்வ்யூ கதையை சொல்லப்போவதில்லை. மாறாக கிளைமாக்ஸில் இருந்து..

எல்லாம் முடிந்து, உள்ளே கம்பெனி ஆட்கள் தீவிரமாக விவாதிக்கிறார்கள். வெளியில் படப்படப்புடன் நாங்கள்.. இரவு 9 மணி வாக்கில் நேர்காணல் எல்லாம் முடிந்து விட்டது.. வெளியே வந்து ஒன்றும் அறிவிக்க மாட்டேங்கிறார்கள்.. பெரும் மௌனத்தில் நாங்கள்.. நாங்கள் என்றால் எங்கள் குழு.. அந்த நேரத்திலும் எப்பொழுதும் 'காமெடி' பண்ணும் 'மச்சி' அங்கு வந்து விட்டார். சத்தம் போட்டு அவர் இடைவெளியின்றி சொல்லும் காமெடிகளை (இந்த நேரத்திலுமா?) எங்களால் சிறிதும் பொறுக்க முடியவில்லை. டக்கென்று இடம் மாறினோம்.. மனம் தளராத மச்சி அங்கும் ஆஜரானார். தலை தெறித்து கடைசியில் ஒரு நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வந்தோம்.

திடீர் என்று அதிக அமைதி.. சத்தம் தான் காட்டி கொடுக்க வேண்டும் என்பது இல்லை. அந்த அபிரிமிதமான அமைதி எல்லாரையும் உஷார் படுத்தியது.. சல புல என்று அந்த கட்டிடத்தை நோக்கி நகர்ந்தோம்.. பேச்சு அதிகமானது.. சலசலப்பாக இருந்த கூட்டம் திரும்பி மயான அமைதி ஆகிறது (மணி இரவு 12). அத்தனை காதுகளும், அங்கு திடீர் என்று தோன்றி, கையில் காகிதத்தை வைத்து இருந்த, அதை பார்த்து படித்தவரின் ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாக கேட்கிறது (அந்த 4 வருடங்களில், அனைத்து மாணவர்களாலும் அவ்வளவு கூர்ந்து கவனிக்கப்பட்ட ஒரு (ஒரே?) பேச்சு என்று அதை சொல்லலாம்). அவர் ஆரம்பிக்கிறார்..

மன்னிக்கவும்.. சிறிது தாமதமாகி விட்டது (அதான் தெரியுமே.. மேல..)
நிறைய க்ரைடீரியாவை அலசி இந்த முடிவுக்கு வந்துள்ளோம் (சரி..)
இனியும் உங்களை காக்க வைக்க விறும்பவில்லை (அப்பாடி) என்று செலெக்ட் ஆனவர்களை ஒவ்வொரு பேராக படிக்க ஆரம்பித்தார். அது வரை காத்து காத்து குளிர்ந்து போய் இருந்த இதயம் திரும்பி சூடு பிடித்து ஓட ஆரம்பித்தது..

அகிலா, அருண், அவினாஷ்.., ஆ, ஆல்பபெடிகல் ஆர்டர் (அதில் என்ன ஆ? அது எல்லாம் தெரியாது.. அப்போது அங்கு உணர்ந்த/நடந்த எல்லாமே பிரமிப்பு தான்).. பெயர்களை காது வாங்கினாலும் மனசு வாங்க வில்லை. பக் பக் அதிகமானது.. பாண்டி.. ஓ, வந்து விட்டது.. பிரசன்னா.. சொல்லி விட்டு அடுத்ததுக்கு போய் விட்டார். என்ன என் பெயரை சொன்னாரா? இல்லையா..? அடாடா, சொன்ன மாதிரியும் இருந்தது.. இல்லை பிரமையா? யாரிடமும் கேட்க முடியாது. ஓங்கி குத்தி விடுவார்கள் பெயர் பட்டியலை கவனிப்பவர்கள்.. ஒரு இக்கட்டான சூழல் நிலவியது. அடுத்து வந்த எந்த பெயரும் சுத்தமாக கேட்க வில்லை. ஒரு வழியாக முடித்தவர் மேல் அனைவரும் பாய்ந்தோம் (எல்லார்க்கும் அப்படித்தான் இருந்திருக்கும் போல).

ஓ.கே ஓ.கே.. லெட்ஸ் பேஸ்ட் தீ ஷீட் ஹியர்.. அவர் தப்பித்து கொள்ள, உடனடியாக xerox எடுக்கப்பட்டு ஒட்டப்பட்டது. என் பெயர்.. என் பெயர்..
காகிதத்தில் என் பெயரை பார்ததும்.. ஆஹா.. பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் விடிவு வந்து விட்டது என்று தான் தோன்றியது (நான் ஒன்றும் கஷ்டப்பட்டு எல்லாம் படிக்க வில்லை. என் வீட்டில் என்னை படிக்க வைத்ததை சொல்கிறேன்). அதில் என் பெயர் சிறிது அழகாக கூட இருக்கிறது (சே.. என்ன இது..).

எனக்கு தெரிந்த எல்லார் இடத்திலும் போய் சொல்ல வேண்டும் போல் இருந்தது. யாருக்கு போன் போடலாம்? வீட்டிற்கு தான்.. அடுத்து பெரியப்பாவிடம் சொல்ல வேண்டும்.. ரொம்ப சந்தோஷப்படுவார்.. வீட்டில் முழித்து இருப்பார்களா? இந்த மாதிரி பெரிய விஷயங்களை முன்னாடியே சொல்லுவதில்லை. ரொம்ப 'டென்சன்' ஆகி விடுவார்கள். இருந்தும் அரசல் புரசலாக சொல்லித்தான் வைத்து இருந்தேன்.

ட்ரிங்க்க்க்.. ட்ரிங்க்க்க்.. கட் பண்ணி விடலாமா?

ஹலோ? - அம்மா தான்.. குரலில் மறைக்கப்பார்க்கும் ஒரு எதிர்பார்ப்பு.. சொல்லி விடலாமா? இல்லை ஆட்டம் காட்டலாமா?

'மா, எனக்கு வேலை கிடைச்சிருச்சு..' சொல்லி விட்டேன்.. பக்கத்தில் மரங்களில் இருந்து வந்ததா.. மெலிதாக வருடிச்சென்றது காற்று.. இல்லை நிம்மதி பெருமூச்சாலா..? பெரும் பாரத்தை இறக்கி வைத்த நிம்மதி. அவர்கள் எவ்வளவு சந்தோசமாக இருப்பார்கள்? பார்க்க விரும்பவில்லை.

இவ்வளவும் நடந்து கொண்டிருக்கும் போதே ஒரு பெருத்த அழுத்தமோ, ஏதோ.. ஒன்று போட்டு அழுத்திக்கொண்டே இருந்தது.. ஆம்.. ஆம்.. என் நெருங்கிய வட்டாரத்தில் ஒரிருவர் தவிர அந்த பட்டியலில் யார் பெயரும் இல்லை. வேலை கிடைத்த பிரமிப்பு சட்டென்று கொஞ்ச நேரத்திலேயே அடங்கியது.. சந்தோசமும் துக்கமும் அடுத்தடுத்து பார்த்த பட்டியலில், எப்போதும் அந்த நிகழ்ச்சிக்கு முதலிடம் உண்டு.

அடுத்து வந்த கம்பெனிகளில் முயன்று, ஒவ்வொருத்தராக வேலை வாங்கி, எல்லாரும் இன்று நல்ல வேலையில்/தொழிலில் இருக்கிறார்கள் (வேலை தேடியவர்களை மட்டும் சொல்கிறேன்.. கொஞ்சம் பேர் மேலே படித்தனர்.. கொஞ்சம் பேர் தான்). நான் மட்டும் அந்த கம்பெனியில் இடம் கிடைக்கவில்லை என்றால், எனக்கு இருந்த 'கான்பிடன்ஸிற்கு', கண்டிப்பாக அந்த வருத்ததிலேயே மத்ததையும் விட்டிருப்பேன். ஆனால், அப்படி கிடைக்கவில்லை என்றால், எப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று என் நண்பர்கள் சொல்லி கொடுத்து விட்டார்கள்.. நம்பிக்கையை இழக்காமல், அடுத்ததில் முழு கவனம் செலுத்தணும்... அது எத்தனையாவது முயற்சியாக இருந்தாலும் சரி.
முழுதும் படிக்க..

Mar 13, 2010

எனது ட்விட்டர் மொழிகள்..


எனது 'ட்விட்டர் மொழி'களை இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.. பிடித்து இருந்தால் ஃபாலோவுங்கள்....



டூர் போய்விட்டு ஆர்குட்டில் போட்டோ போடுவது போய், ஆர்குட்டில் போட்டோ போடுவதற்காகவே டூர் போகும் காலமிது.


                                                              ############


ஒவ்வொரு பவர் கட் போதும் வீட்டில் சண்டை வருவதை கண்டு பிடித்து இருக்கிறேன். மனிதனுக்கு என்னேரமும் பொழுது போக்கு தேவை படுகிறதோ..?


                                                              ############


இந்த 'சேனா'க்கள் பண்ணுகிற கூத்தில், சேன கிழங்கு சாப்பிட கூட பயமா இருக்கு..


                                                              ############


தயவு செய்து,ஒருவர் சாப்பிடும் போது,அவருடைய உள் நாக்கை தேடாதீர்கள்


                                                              ############


பாபு, யமுனாவை சென்னையில் முதல் முறை பார்க்கும் அந்த காட்சி, நம்மையும் கதி கலக்கி விடுகிறது #மோகமுள்


                                                              ############


"தலைவி உன் தமிலுக்கு, என் தமில் நாட்டை தருகிறேன்" - இளையராஜாவின் கிண்டல் :-) #nowhearing கோவா பாட்டு


                                                              ############


சிலர் இயற்கையாகவே செயற்கையாக இருக்கிறார்கள் #அனுபவம்





படு பயங்கர பிஸி ஆகி, இந்த சைடு வர முடியாமல் ஆகி விட்டது. இடைவெளி விழுந்த உடனே, பதிவு எழுதுவதில் உள்ள கவர்ச்சி கொஞ்சம் குறைய வேற ஆரம்பித்தது.. ஒரு 4 புத்தகங்கள் படித்தேன் (ஜெ.மோ -1, சுஜாதா-3).. திரும்பி எப்படியோ எழுத வேண்டும் என்று உண்டாகி விட்டது.. ஆக்கி விட்டார்கள்.. 
முழுதும் படிக்க..