Dec 29, 2009

புது வருடத்தை தொடங்கி வைப்பது யார்?

புத்தாண்டு வந்தால் இந்த 'சம்பவம்'ம் வரும், நினைவுக்கு.. நடந்தது சின்ன வயதில். புதுவருட, தினசரி காலண்டர் ஒன்று கொண்டு வந்தார் அப்பா. சின்ன ஊர் என்பதால் நிறைய எல்லாம் கிடைக்காது. ஒன்று இரண்டு தான். பர்சேசிங் என்ற சர்தார்ஜி அப்போ ரொம்ப இல்லை. அந்த வருடம் வறண்டதால் ஒரு காலண்டர் தான் (மொக்க படம் ஒன்றை போட்டு இருந்தார்கள்).

31 ஆம் தேதி திடீர் என்று சண்டை எனக்கும் என் அக்காவுக்கும். யார் முதலில் தேதி கிழித்து அந்த வருடத்தை தொடங்கி வைப்பதென்று.. வாய்ச்சண்டை முற்றி கைகலப்பாகி, ரத்த காவு கடந்து, அம்மா வந்து சமாதானப்படுத்தி, இருவரும் சேர்ந்தே அந்த வருடத்தை துவக்கி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

வெற்றிகரமாக 31 இரவு 12 மணிக்கு, தள்ளி முள்ளி நான்கு கைகளால் தேதி கிழிக்கப்பட்டு, அந்த வருடம் சிறப்பாக துவக்கி வைக்கப்பட்டது.

எல்லா களேபரமும் முடிந்ததும்., இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எங்கள் பாட்டி.. "ஏண்டா.. இன்னிக்கு தேதி கிழிச்சா, அது ரெண்டாந்தேதி ஆகிடாது..? இன்னிக்கி தேதி ஒன்னு தான?"

பேய் முழி முழித்து, 'ஹீ ஹீ சர்யான லூசு' என்று அக்காவை கிண்டல் செய்து நான் சட்டென்று சைடு மாறி விட்டேன். இந்த வரலாற்று தவறை அவள் மட்டும் செய்ததாக மாற்றி ஓரளவு வெற்றியும் பெற்றேன் (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே)..

இப்பொழுதும் கிண்டலடிப்பதுண்டு அவளை.. என்ன, இப்போ ஏகப்பட்ட காலண்டர் (கர்சீப் வாங்குனா கூட ஒன்னு கொடுக்கிறார்கள்). ஆனால், தேதி எல்லாம் கிழிப்பது இல்லை. ஏன், சுவற்றில் தொங்கும் காலண்டரில் கடைசியாக தேதி பார்த்தது எப்போது என்றே நினைவில்லை..

2 comments:

அன்புடன் நான் said...

நல்ல பகிர்வு.... அப்போது இருந்த ஆர்வம் இப்போது இல்லை...... எல்லாம் கால ஓட்டம்.

prathiba said...

Adapaavi.. ipdi ellam vera varalaru irruka?? nee dhan thedhi kizhichadhu.. idhu ellarukum theriyum.. :)