Mar 8, 2014

சன்னு குட்டியின் டெடி பொம்மை

சன்னு குட்டி பள்ளிக்கூடத்துக்கு பாட்டி கூட ஆட்டோல டுர்ர்ர்னு போயிட்டு இருந்தான். வழில வர்ற கடை, குளம்னு வேடிக்கை பாத்துட்டே வந்தான். அப்போ திடீர்னு ஆட்டோ பக்கத்துல ரெண்டு காக்கா பறந்து வந்து 'சன்னு குட்டி நில்லு நில்லு'னு கத்துச்சாம். ஆட்டோ அண்ணா கிட்ட வண்டிய நிறுத்தச்சொல்லிட்டு சன்னு கேட்டானாம் 'என்ன காக்கா எதுக்கு பள்ளிக்கு போகும் போது நிக்கச்சொல்ற? நேரம் ஆகுதுல்ல? சீக்கிரம் சொல்லு'.

அதுக்கு காக்கா சொல்லுச்சாம்.. 'நம்ம டெடி பேர் வீட்டுல யார்கிட்டயும் சொல்லாம வெளில வந்துச்சு, அத நரி தூக்கிட்டு போயிடுச்சு. சீக்கிரம் வா' அப்படின்னுச்சாம்.

'டெடி அப்படி சொல்லாம போகாதே? ஆட்டோவ திருப்புங்க'
'காக்கா, நரி போன இடத்த ஆட்டோ அண்ணாக்கு வழி காட்டு ப்ளீஸ்' அப்படின்னு சொல்லிட்டு வேகமா வண்டில ஏறி உக்காந்தான் சன்னு.

காக்கா முன்னாடி வழி காட்டிகிட்டே போக, பின்னாடி ஆட்டோல சன்னு வந்து நரியோட இடத்துக்கு வந்து பாத்தா.....

நரி டெடி பொம்மையை பத்திரமா வீட்டுல வச்சி ஜூஸ் கொடுத்துக்கிட்டு இருந்தது.

'நரி, ஏன் டெடியை தூக்கிட்டு வந்தீங்க?' அப்படின்னு கேட்டான் சன்னு.

அதுக்கு நரி 'டெடி வழி தெரியாம சுத்திட்டு இருந்தான், அதான் இங்க பத்திரமா வச்சு அப்புறமா உங்க வீட்டுல விடலாம்னு வச்சிருக்கேன்'

'ஓ அப்டியா? ரொம்ப நன்றி.. டெடிய இப்போ நான் கூட்டிட்டு போறேன்' னு சொல்லி வீட்டுல பத்திரமா அவனோட இடத்துல டெடிய வச்சிகிட்டான் சன்னு. 'இனி யார்கிட்டயும் சொல்லாம எங்கயும் போகக்கூடாது சரியா?'அப்படின்னு டெடி கிட்டயும் சொல்லி கொடுத்துட்டான்.

அன்னைல இருந்து சன்னுவும் நரியும் பெஸ்ட் பிரண்ட்ஸ் ஆகிட்டாங்க!


1 comment:

Prasanna said...

கதை சொல்கையில் சன்னு-க்கு பதில் உங்கள் குழந்தையின் பெயரை போட்டு சொல்லவும் :)