Jan 11, 2014

சிலைத் திருட்டு

தமிழகம் முழுக்க கோவில்களில் இருக்கும் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள். கண்டுகொள்ள ஆள் இல்லாமல் களவு போகின்றன. கிட்டத்தட்ட அனைத்து கோவில்களும் சிலைகளும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் அவர்களிடம் கோவில்களில் இருக்கும் சிலைகளை பற்றியும், அதன் தொன்மத்தைப் பற்றியும் ஆவணங்கள் கிடையாது. சிலைத்திருடி கோடிக்கணக்கில் விற்பவர்களிடம் மட்டும் இந்த டேட்டாபேஸ் எப்படியோ இருக்கிறது போலும் (Information is wealth என்பது இவர்களுக்கு ரொம்ப பொருந்துகிறது. அவர்களை பிடித்து தகவல்களை ரீ யூஸ் செய்துகொள்ளலாம்).

ஆட்கள் மற்றும் நிதிப்பற்றாக்குறையால் இருக்கும் இந்த துறைகளுக்கு ஏன் இந்துத்துவர்கள் உதவக்கூடாது? பிரச்சினைக்குரிய இடங்களில் கோவில்களை கட்டுவதையும், முக்குக்கு ஒரு பிள்ளையார் கோவில் எழுப்புவதையும் விடுத்து, இப்படி பாழடைந்து கிடக்கும் கோவில்களை சுத்தப்படுத்தி, அவற்றின் பராமரிப்பில் உதவலாமே?

வெளியில் இருந்து வந்து நம்மை அழித்துவிடுவார்கள், இந்து மதம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும் போன்ற கற்பனையான பயத்தை தூண்டுவதை விடுத்து இப்படி பாழடையும் கோவில்களையும் சிலைகளையும் பாதுகாப்பதை போன்று உருப்படியாக ஏதாவது செய்யலாம்.

11/365


No comments: