Jan 28, 2014

சில நேரங்களில் சில மனிதர்கள்

ஒரு வீடு ஒரு மனிதன்... படித்துவிட்டு உடனே இதை ஆரம்பித்தேன். இரண்டும் இரண்டு extreme! உக்கிரமான நாவல் இது. அக்னிபிரவேசம் என்ற சிறுகதை முதலில் எழுதி அது சர்ச்சையாகி பின் அதை அடிப்படையாக வைத்து ஜெயகாந்தன் எழுதிய நாவல். இதே விஷயம் ஆட்டோ பிக்ஷன் அது இது என்கிறார்களே, அது போல நாவலில் RKV என்ற எழுத்தாளர் எழுதுவதாக வருகிறது (இதை படமாக எடுத்தபோது இந்த பாத்திரத்தில் நடித்தவர் நாகேஷ். இயக்குனர் பீம்சிங் ஜெயகாந்தனை ஓட்டியிருக்க வாய்ப்புகள் குறைவு) .

கங்காவின் வெறுமைதான் கதை. தனிமையினால் வரும் வெறுமை. Furnace அருகில் நின்று பார்ப்பது போல் கங்காவின் தனிமையை படிக்கையில் உணர்ந்தேன். சீதையின் வடிவம் அவள் என்று சொல்லும் இந்த பதிவை விட அழகாக என்னால் இந்த நாவலைப்பற்றி சொல்ல முடியாது -

ஜெயமோகனின் கருத்து

ஒரு வீடு ஒரு மனிதனில் எங்கும் ஒரே வெளிச்சம். இங்கு பயங்கர இருள். எழுத்தின் சாத்தியங்கள்!

28/365


No comments: